பதிவு செய்த நாள்
08
அக்
2019
11:10
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், சக்தி கொலுவின், ஒன்பதாம் நாளான நேற்று, அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி, ஒன்பதாம் நாள் விழா, நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. சக்தி கொலுவில் பிரதானமாக வீற்றுள்ள அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சக்தி கொலுவில், நேற்று முன்தினம் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் தம்பி ராமைய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பார்வையிட்டு தரிசித்தனர்.நேற்று மாலை, 4:00 மணிக்கு, கூத்தம்பலம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சூக்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.மாலை நடந்த பொதுமக்கள் கொலு பாட்டு நிகழ்ச்சியில், பலர் ஆர்வத்துடன் பங்கேற்று பாடி, பார்வையாளர்களை கவர்ந்தனர்.
நேற்று மாலை, 7:00 மணிக்கு, அன்பை பெற சக்தி கொடு எனும் தலைப்பில், பாரதி திருமுருகன் சொற்பொழிவு நடந்தது.இன்று வித்யாரம்பம்வடபழநி ஆண்டவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு, இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டரை வயது முதல், மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, அவர்களின் ஆரம்ப கல்வி துவக்கி வைக்கப்படுகிறது.காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், உங்கள் வீட்டு குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.