மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் சுவாமி எழுந்தருளும் வாகனங்கள் பழுதால் சுவாமி வீதி உலா வருவது நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ரூ. 6 லட்சம் மதிப்பில் வாகனங்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இரண்டு ரிஷப, ஒரு யானை, ஒரு சிம்ம வாகனம் தயாரிக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.