மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் இங்கு பிரமாண்ட ஊர்வலம் நடக்கும். மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரியை ஒன்பது இரவு சென்று வணங்குவது வழக்கம். பத்தாவது நாளில் போருக்கு செல்வர். தேவியருளால் வெற்றி வாகை சூடுவர். மைசூருவில் தசரா விழாவை தஸ் ராத் என்பர். இதற்கு பத்து இரவுகள் என பொருள். இது திரிந்து தசரா எனப்படுகிறது.