உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அந்தியூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் சுவாமி அத்திவரதர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுரிராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.