Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா பொங்கல் முதல் திருமலையில் பிளாஸ்டிக்குக்கு முழு தடை பொங்கல் முதல் திருமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடந்தை சாரங்கபாணி தேருக்கு பிரமாண்ட வடம்
எழுத்தின் அளவு:
குடந்தை சாரங்கபாணி தேருக்கு பிரமாண்ட வடம்

பதிவு செய்த நாள்

24 அக்
2019
11:10

தஞ்சாவூர்:  கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேருக்காக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், 7 அரை டன் தென்னை நாரில், தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட வடங்கள் நேற்று, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான சாரங்கபாணி சாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பு பெற்ற இந்த தேருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் புதிய வடங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 லட்சம் மதிப்பில் 1 அடி சுற்றளவில், 100 மீட்டர் நீளம் உடைய 2 வடங்களும், 18 அங்குலம் சுற்றளவுடன் 175 அடி நீளம் கொண்ட 2 வடங்களும் என மொத்தம் 4 பிரம்மாண்ட வடங்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தியாளர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. சுமார் ஏழரை டன் தென்னை நார் கொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு உருவாக்கப்பட்ட இந்த வடங்கள் நேற்று லாரி மூலம், சாரங்கபாணி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய தேர் வடங்களை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், மற்றும் கோவில் பணியாளர்கள் பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர். வருகிற 2020ம் ஆண்டு நடைபெற உள்ள சித்திரை தேர் திருவிழாவில் இந்த வடங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar