வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடந்த பிரதோஷ பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, பிரதோஷ பூஜை, நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது. பால், மஞ்சள், இளநீர், தேன், தயிர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.மாலை, 6:10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.