அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2019 10:10
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேன் அபிஷேகம் நடந்தது. சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி எதிரில் நவவீரர்கள் காப்பு கட்டினர். பின்னர் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். இரவு சர்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. வரும் 1 ம் தேதி கம்பம் ஏறும் நிகழ்ச்சியும் 2 ம் தேதி சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. அடுத்தநாள் 3 ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் செய்துள்ளனர்.