அனைத்து அவதாரங்களும் ஒன்று திரண்ட உருவம் பெற்ற உனது தரிசனம் புண்ணியமானது. காஞ்சிபுரத்தில் மரப்பிரபுவாக அமர்ந்துள்ள நீ இன்றே எங்களுக்கு தரிசன பலனை அளிப்பாயாக!
நல்ல குழந்தைகள் இல்லை என்ற குறையையும், குழந்தையே இல்லையே என்ற குறையையும் நீக்கக் கூடியது உன் தரிசனம். நீ அனைத்து உலகையும் காப்பாற்றுவேன் என உறுதி பூண்டவன் ஆயிற்றே! உன் தரிசனத்தால் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும்.
40 ஆண்டுகளாக குளத்தில் மூழ்கி இருந்த உன் திவ்ய உடலை இப்பொழுது காணும் பாக்கியத்தை நாங்கள் பெற்றது உனது அணுவினும் மிகச் சிறிய அருளால் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆபத்து காலத்தில் தோஷம் போக்குபவனாகவும், அனைத்து செல்வங்களையும் தரக் கூடியவனாகவும் திகழ்கிறாய். உனதருளால் எங்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அளிப்பாயாக.