Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலபைரவர் கோவிலில் தமிழ் புத்தாண்டு ... நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்! நரசிம்மருக்கு இப்படியும் ஒரு பெயர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2012
11:04

கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா பங்குனி உத்திரம் முதல் வாரம் துவங்குவது வழக்கம். நடப்பாண்டும் கந்தர்வக்கோட்டையில் இருந்து ஸ்வாமி புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் அந்தப்பகுதியை ஒவ்வொரு கடைகாரர்களும் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தினர். தேர்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரமும், மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் வளாகத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து உள்ளூர் கிராம பொதுமக்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கந்தர்வக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலையிலிருந்து தாங்கள் ஊர்களிலிருந்து பால்காவடி, பன்னீர்காவடி, கரும்பு பிள்ளை தொட்டி, உடல்கள் மீது அலகு வேல்கள் குத்திக்கொண்டும் கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் கோவில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கந்தர்வக் கோட்டையிலிருந்து வேம்பன்பட்டி வரையிலும் நீர்மோர் பந்தல், குளிர்பானம் மற்றும் கோவிலை சுற்றிலும் பல இடங்களில் அன்னதானமும், ஏற்பாடுகளை பல்வேறு அமைப்பினர் செய்திருனர். திருவிழாவை முன்னிட்டு, கந்தர்வக்கோட்டையில் இருந்து வேம்பன்பட்டிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுகை எஸ்.பி., உத்தரவின் பேரில் கந்தர்வக்கோட்டை எஸ்.ஐ.,க்கள் சந்திரமோகன், கேசவமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar