Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ... கந்த சஷ்டி விழா நிறைவு:அலகுமலை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம்: மருதமலையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
02:11

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்), திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது.

இக்கோவிலில், கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. ஆறாம் நாள், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடந்தது.கந்தசஷ்டி திருவிழாவின் இறுதி நாளான நேற்று (நவம்., 3ல்) காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை யுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருகல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.அதன்பின், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கல்யாணத்தில் பக்தர்கள் செலுத்திய மொய் பணம், 77,936 ரூபாய் வசூலானது. திருக்கல் யாணத்திற்குப் பின், பக்தர்களுக்கு திருமஞ்சள் கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது.அதன்பின், கடந்த, ஏழு நாட்களாக விரதமிருந்து வந்த பக்தர்கள், தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar