ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: வரும் 6ல் முகூர்த்தக்கால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2019 02:11
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வரும் 6ம் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருகிற 6ம்தேதி புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெறுகிறது.
25 12 .2019 அன்று திருநெடுந்தாண்டகம் 26 12 2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழா 05.01 2020 அன்று மோகினி அலங்காரம் 0 6 .01. 2020 அன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பு 12 .01.2020 அன்று திருக்கைத்தல சேவை 13.01 .2020 வேடுபரி வைபவம் 15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரி 16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.