Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் கந்த சஷ்டி ... வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனமரத்துப்பட்டியில் ’கருப்பணாருக்கு’ காவு சோறு வீசி வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
03:11

பனமரத்துப்பட்டி: அம்மன் கோவிலில், மரத்திலுள்ள கருப்பணார் சுவாமிக்கு, காவு சோறு வீசிய வினோத நிகழ்ச்சி நடந்தது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம், பிடாரி அம்மன் கோவிலில், 100 அடி உயரமுள்ள ஆச்சா மரத்தில், கருப்பணார் சுவாமி இருப்பதாக, மக்கள் வழிபடுகின்றனர். அக்கோவில் திருவிழா, கடந்த அக்., 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் (நவம்., 2ல்), அம்மனுக்கு அபிஷேகம், வெள்ளி கவசம், தீபாராதனை, சக்தி அழைத்தல் உள்ளி ட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள், பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். பூசாரிகள், ஒரு புது பானையில், பொங்கல் வைத்தனர். ஒரு ஆட்டுக்குட்டியை அறுத்து, அதன் ரத்தத்தை சோற்றில் கலந்து, காவு சோறு தயாரித்தனர். 8:00 மணிக்கு, அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.

பூசாரிகள், ஆச்சா மர உச்சியை நோக்கி, காவு சோறு உருண்டையை வீசி, திரும்பி பார்க்காமல் சென்றனர். மரத்திலுள்ள கருப்பணார், சோற்றை பிடித்துக் கொள்வதால், மேலே வீசியது, திரும்பி வருவதில்லை என, பூசாரிகள் தெரிவித்தனர். அதற்கேற்ப, நேற்று (நவம்., 3ல்) காலை, காவு சோறு விழுந்ததற்கான அறிகுறி இல்லை. தொடர்ந்து, பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில், சமைத்து, உறவினர், நண்பர்களுக்கு விருந்து வைத்து, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar