Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துக்குமரசாமி கோவிலில் ஊஞ்சல் ... திருமலையில் புஷ்பயாகம்: 13 டன் மலர்களால் அபிஷேகம் திருமலையில் புஷ்பயாகம்: 13 டன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோயிலில் 1034 வது சதய விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோயிலில் 1034 வது சதய விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 நவ
2019
11:11

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1034வது துவங்கியது. உலகம் போற்றும் புகழுடைய தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில்  கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, திருமுறை அரங்கம், திருமுறை இசையரங்கம், வயலின் இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலெக்டர் அண்ணாதுரை கலந்துக் கொண்டார்.  மேலும் இரவு 7.30 மணியளவில் மாமன்னர் ராஜராஜசோழனின் பெரும் புகழுக்குக் காரணம் ஆட்சித் திறனா? பக்திப் பணியா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது. சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டி மன்றத்தில் பேராசிரியர் ராஜாராம், செ. மோகனசுந்தரம், இராம. செüந்தரவள்ளி, விஜயசுந்தரி ஆகியோர் பேச உள்ளனர். நவ. 6ம் தேதி மாமன்னனின் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம், மாலை 6 மணியளவில் தஞ்சை பெரியகோயிலின் கட்டுமான விந்தைகள் என்ற தலைப்பில் ஒலி, ஒளிக் காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பின்னர் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் தொல்லியல் கட்டுமானங்கள் புனரமைப்புப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை என். செல்வராஜ் ஆகியோருக்கு மாமன்னன் ராசராசன் விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் திரைப்படப் பாடகர் வேல்முருகன், கோபு குழுவினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar