மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லியில் லட்சுமிதேவி மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நாள் என்பதால் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வார்கள். பஞ்சாபில் எமதர்மன் நசிகேதன் கேட்ட வரங்களை அளித்து அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த நாளென்று கருதி தீபாவளியை கொண்டாடுவார்கள்.