உடுமலை: உடுமலை, ருத்ரப்ப நகரில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள விசாலாட்சி உடனமர் பஞ்சமுகலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு அன்னாபிஷேக சிறப்பு பூஜை, வரும் 11ம் தேதி நடக்கிறது.சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம், மதியம், 3:00 மணி முதல், மாலை, 6:30 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.