ஈரோடு: பவானி தாலுகா, குறிச்சி அடுத்த அடிக்கரைதோட்டம் வரசித்தி கணபதி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபி ஷேக விழா வரும், 15ல் நடக்க உள்ளது. முன்னதாக, 14 காலை, 7:00 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், பின், முளைப்பாலிகை எடுத்து வருதல், முதல் யாகசாலை பூஜை நடக்கிறது. 15ல் காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.