பதிவு செய்த நாள்
07
நவ
2019
04:11
ஈரோடு: கோட்டை, வாராணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கும்பாபி?ஷக திருப்பணிகள், சாரம் கட்டும் பணியுடன் தொடங்கியது.
ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. நடராஜர் சன்னதி, வாரணாம்பிகை அம்மன், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர், சந்திரன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன, ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம், குருபெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை, அன்னாபிஷேகம், ஆனி திருமஞ்சனம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும். கடந்த, 2008ல் கும்பாபிஷேக விழா நடந்தது. அடுத்து, 2020ல் நடைபெற உள்ளது. இதற்காக அறநிலையத்துறை அனுமதி பெற்று, திருப்பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக கடந்த, செப்.,ல் பூமி பூஜை போடப்பட்டது. நேற்று, கோவில் ராஜ கோபுரம் வர்ணம் தீட்டும் பணிக்காக, சவுக்கு மரம் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பணியின் முழு செலவையும், அருள்நெறி திருக்கூட்டம் அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக ராஜ கோபுர சிற்பங்கள் வர்ணம் பூசும் பணியும், தொடர்ந்து தரைத்தளம் செப்பனிடும் பணிகள், ஆகம விதிப்படி சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது.