பதிவு செய்த நாள்
10
ஜூன்
2023
04:06
தெய்வத்திற்கு பக்தர்கள் சூட்டுவது பூமாலை. இது வாடிவிடும். தெய்வத்தின் அருள் பெற்ற அடியார்கள் சூட்டுவது பாமாலை. இது வாடாது. அடியார்களுக்கு தெய்வமே, அசரீரியாக பாடலுக்கு முதல் வரி எடுத்து கொடுத்தது அந்த வரிகளை தெரிந்து கொள்வோமா....
(முதல் திருமுறை) தோடுடைய செவியன் – திருஞானசம்பந்தர்
(ஏழாம் திருமுறை) பித்தா பிறை சூடி, தில்லை வாழ் அந்தணர் – சுந்தர மூர்த்தி சுவாமிகள்
(பெரியபுராணம்) உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் – தெய்வச்சேக்கிழார்
(கந்தர் கலிவெண்பா) பூமேவு செங்கமலப்புத்தேளும் – குமரகுருபரர்
(திருப்புகழ்) முத்தை தரு பத்தித்திருநகை – அருணகிரிநாதர்
(கந்தபுராணம்) திகடச்சக்கர செம்முக மைந்துளான் – கச்சியப்ப சிவாச்சாரியார்