Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இசை வாது வென்ற படலம் திருமுகம் கொடுத்த படலம்! திருமுகம் கொடுத்த படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
பலகையிட்ட படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மார்
2011
03:03

சோமசுந்தரக் கடவுளை மூன்று வேளையும் வணங்கி இசை பாடி வந்த பாணபத்திரர் இப்போது அர்த்த சாமத்திலும் இறைவனைப் பாட ஆரம்பித்து விட்டார். தன்னை இசையால் வசப்படுத்திய பாணபத்திரரிடம் மற்றொரு திருவிளையாடலையும் புரிந்தார் ஈசன். ஒருநாள், அவர் கோயிலுக்கு புறப்பட்ட போது கடும் மழை, இடி, மின்னல் என இருந்தது. யாழை ஒரு துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு, எப்படியாவது கோயிலுக்கு போய் விட வேண்டுமெனக் கருதிய பாணபத்திரர் கொட்டும் மழையில் நடந்து கொண்டிருந்தார். யாழை துணியில் சுற்றி வைத்திருந்தாலும் கூட, பலத்த மழையில் அது நனைந்ததைத் தடுக்க அவரால் முடியவில்லை. எங்கும் சேறு வேறு. குளிரில் உடல் நடுங்க கோயில் வந்து சேர்ந்தார். வழக்கம் போல யாழை எடுத்து மீட்ட ஆரம்பித்தார். கைகள் நடுங்கியதாலும், மழையில் யாழ் நனைந்து போனதாலும் இசை ஒழுங்காக வரவில்லை. அபஸ்வரம் போலத் தெரிந்தது. இதற்குள் வெளியே பெய்த மழை நீர் கோயிலுக்குள் புகுந்து பாணபத்திரர் நின்ற மண்டபத்தைச் சூழ்ந்தது. தண்ணீருக்குள் நின்றபடி பாணபத்திரர் கடும் முயற்சி செய்து யாழை மீட்டியபடியே இறைவனை  புகழ்ந்து பாட ஆரம்பித்தார். கடும் முயற்சி இருந்தால், எந்தச் சூழலிலும் நமது பணியைத் திறம்படச் செய்யலாம் என்பதற்கு பாணபத்திரரின் முயற்சியே உதாரணம்.

அங்கு ஏற்கனவே வந்து நின்ற பக்தர்கள் பாணபத்திரரின் இந்தச் செய்கையைப்பாராட்டியதுடன், அர்த்தஜாம பூஜை வேளையில் தங்களை மழை வெள்ளத்துடன் இசை வெள்ளத்திலும் நீந்த வைத்ததற்காக அவருக்கும், இறைவனுக்கும் நன்றி கூறினர். அப்போது பாணபத்திரரின் காதுகளில் ஒரு ஒலி கேட்டது. பாணபத்திரா! எந்தச் சூழலிலும் தளராத உனது பக்தியின் பெருமையை உலகோர் உணரவே இந்த திருவிளையாடலைப் புரிந்தேன். நீ திடமானவன், வைராக்கியமானவன்.இதோ! இங்கு நிற்போர் அனைவரும் அதிசயப்படும் வகையில் தங்கத்தால் ஆன பலகை ஒன்றை உன் முன் தோன்றும்படி செய்கிறேன். நீ தினமும் அதன்மீது நின்று யாழிசைக்கலாம், என்றது. சொன்ன மறுகணமே வானில் இருந்து ஒரு தங்கப்பலகை கோயில் மண்டபத்துக்குள் புகுந்து, பாணபத்திரர் முன்னால் வந்தது. ஊரார் அதிசயித்தனர். சோமசுந்தரரின் கருணையே கருணை என்று வாழ்த்தினர். பாணபத்திரர் அதன் மீது ஏறி நின்று இனிய கீதம் இசைத்தார். பூஜை முடிந்ததும், தனக்கு இறைவன் தந்த தங்கப்பலகையை தலையில் ஏந்தி வீடு சென்றார் பாணபத்திரர். இந்தத் தகவல் மன்னன் வரகுணபாண்டியனின் கவனத்திற்கு வரவே, மறுநாள் காலையில் பாணபத்திரரின் வீட்டுக்கு பல்லக்கை அனுப்பி, அவரை அதில் ஏற்றி வரச்செய்தான். பாணபத்திரர் இறைவனால் தனக்கு அருளப்பட்ட தங்கப்பலகையுடன் அவைக்கு வந்தார். அந்தப் பலகை மீது பட்டு விரித்து அதன் மேல் பாணபத்திரரை அமரச் செய்தான் மன்னன். அவரைப் பாராட்டிப் பேசினான். மதுரையின் நாயகன் என பட்டம் கொடுத்தான். இவ்வாறு பாணபத்திரருக்கு அருள் செய்தார் சுந்தரேசர். இதன் பின் சிலகாலம் வாழ்ந்த வரகுணப்பாண்டியன் சிவனடி சேர்ந்து விட்டார்.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar