Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஓர் இரவு ஆரியங்காவில் நாளை ஆரியங்காவில் நாளை
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
சபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி?
எழுத்தின் அளவு:
சபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி?

பதிவு செய்த நாள்

27 நவ
2017
11:11

சபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சபரிமலையில் ஸ்ரீகோயில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ பாத்திரத்தில் போடப்படும் காணிக்கை அதன் அடிப்பகுதி வழியாக கீழே செல்லும் போது, கன்வெயர் பெல்ட் மூலம் காணிக்கை எண்ணும் இடத்துக்கு செல்கிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 இயந்திரங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 இயந்திரங்கள் உட்பட 14 இயந்திரங்கள் காணிக்கை எண்ண பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஊழியர்கள் நாணயங்களை மதிப்பு படி தரம் பிரித்தல், மடங்கியிருக்கும் நோட்டுகளை சரி செய்தல் போன்ற பணிகளை செய்கின்றனர்.இவ்வாறு செய்த பின்னர் 6 இயந்திரங்கள் மூலம் நோட்டுகள் எண்ணப்பட்டு 100 நோட்டுகளாக கட்டப்படும். இதுபோல 4 இயந்திரங்களில் நாணயங்கள் எண்ணப்படும். ஊழியர்கள் எண்ணி கட்டிய நோட்டுகள், பின்னர் வெளிநாட்டு இயந்திரத்தின் மூலம் மீண்டும் எண்ணப்படும். இந்த இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் தனியாக பிரிந்து விடும். இவ்வாறு எண்ணிய பின்னர் பேங்க் அதிகாரிகள் இயந்திரம் மூலம் மீண்டும் ஒரு முறை எண்ணி எடுத்து செல்வர். இதுபோல நாணயங்கள் 2000 வீதம் இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு சாக்கு பையில் போட்டு தையல் போட்டு டிராக்டரில் பம்பை கொண்டு செல்லப்படும். அங்கிருந்து தனலட்சுமி வங்கி கிளைகளுக்கு கொண்டு செல்லப்படும். சபரிமலை காணிக்கையில் 12 சதவீதம் நாணயங்களாக வருகிறது. 14 சதவீதம் இ காணிக்கையாக வருகிறது. மீதமுள்ளவை ரூபாய் நோட்டுகளாக வருகின்றன. வெளிநாட்டு கரன்சிகளும் கிடைக்கின்றன.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
கேரளா மற்றும்  தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரிஎண்    கோயில்    இருப்பிடம்       ... மேலும்
 
temple news

ஆரியங்காவில் நாளை டிசம்பர் 15,2017

பக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.அதிகாலை14:45 : திருப்பள்ளி ... மேலும்
 
temple news
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், ... மேலும்
 
temple news
கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar