மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 27 · 14 / 159

தமிழ் மாத வீதிகள்

மீனாட்சியம்மன் கோயிலுக்கு பிற கோயில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருளுகிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலை சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது. ஆவணி வீதி மட்டும் மூல நட்சத்திரத்துடன் இணைந்து ‘ஆவணி மூல வீதி’ என அழைக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ இம்மாதத்தில் நிகழ்ந்தது. ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா விசேஷமாக நடக்கிறது. விழாவின்போது சுவாமி இந்த வீதியை சுற்றி வருகிறார்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்