Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சரணகோஷம் முழங்க சபரிமலை நடை திறப்பு சபரிமலையில் முதல் நாள் வருமானம்: ரூ.3.32 கோடி சபரிமலையில் முதல் நாள் வருமானம்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை காடுகளில் சரண கோஷம்: குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலை காடுகளில் சரண கோஷம்: குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 நவ
2019
10:11

சபரிமலை: புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. பக்தர்களின் சரண கோஷம் சபரிமலை காடுகளில் எதிரொலிக்க தொடங்கியது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள், மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை முதல் தேதியான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து, தீபம் ஏற்றினார். அப்போது பக்தர்கள் சரண கோஷமிட்டனர். தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கணபதி ஹோமமும், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை நடந்தது. வரும், 40 நாட்களிலும், தினமும் அதிகாலை, 3:00 மணிக்கு, நடை திறக்கும். டிச., 27ம் தேதி, மண்டலபூஜை நடைபெறுகிறது.

பூங்காவனம்: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, கார்த்திகை, 1ம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 18-ம் படியேறுவதற்காக, நீண்ட வரிசை காணப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும், புண்ணியனம் பூங்காவனம் திட்டம், தொடங்கி வைக்கப்பட்டது. பக்தர்கள், தங்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும், கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஓட்டல்களில் கூட்டம்: மாளிகைப்புறம் கோவில் எதிர்புறம் இருந்த கட்டடம் இடிக்கப்பட்டு, அங்கு, பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வருகை பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பெரும் நஷ்டத்துக்கு ஆளான வியாபாரிகள், இந்த முறை ஓட்டல்களை ஏலத்தில் எடுக்கவில்லை. சில ஓட்டல்கள் மட்டுமே இயங்குவதால், அவற்றில் கூட்டம் அலைமோதியது.

கார்களுக்கு அனுமதி: இதற்கிடையில், சபரி மலை வரும் சிறிய கார்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். ஆனால், நிலக்கல்லில் மட்டுமே, அவற்றை நிறுத்தி வைக்க முடியும், என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.பம்பை வரை கார்களுக்கு அனுமதிஇதற்கிடையில், சபரிமலை வரும் சிறிய கார்கள் பம்பை வரை செல்ல அனுமதிக்கப்படும். ஆனால், நிலக்கல்லில் மட்டுமே, அவற்றை நிறுத்திவைக்க முடியும், என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar