Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிருஷ்ணகிரி காலபைரவர் கோவிலில் ... திருப்பூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம் கோலாகலம் திருப்பூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
03:11

நாமக்கல்: நாமக்கல், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு விழா வரும், 24ல், நடக்கிறது. நேற்று (நவம்., 17ல்) காலை, 8:30 மணிக்கு திருப்பலி யும், 10:30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமை வகித்து, திருவிழா திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

அதை தொடர்ந்து இன்று 18ல் துவங்கி, வரும், 23 வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. அதில், சிலுவைகிரி பங்கு தந்தை ஜெய் பெர்னார்டு ஜோசப், ஏற்காடு மஞ்சக்குட்டை பங்கு தந்தை ஹென்றி கிஷோர், கருமந்துறை பங்கு தந்தை அமல் மகிமை தாஸ், வெள்ளாளப்பாளையம் பங்கு தந்தை ஞானராஜ், தலைவாசல் பங்குதந்தை எட்வர்டு ததேயுஸ், சேலம் இளங்குருமடம் உதவி அதிபர் ஸ்டேன்லி சேவியர் ஆகியோர் தலைமை யில், திருப்பலி நடக்கிறது.

வரும், 24ல் காலை, 8:45 மணிக்கு அருட்பணியாளர்களுக்கு வரவேற்பு, 9:00 மணிக்கு சேலம் மூவேந்தர் அரங்க இயக்குனர் ஸ்டீபன் சொரூபன் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் தலைமையில், திருவிழா திருப்பலி, மாலை, 6:00 மணிக்கு தேர் மந்திரிப்பு மற்றும் கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

அலங்கரிக்கப்பட்டி மின் தேரில், நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் கிறிஸ்து அரசர், பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார். வழிநெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குவர். இரவு, 9:30 மணிக்கு பேட்டப் பாளையம் பங்கு தந்தை பிரகாஷ் தலைமையில், திவ்விய நற்கருணை ஆசீர் மற்றும் கொடியிறக்கம் செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar