Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோவிலுக்கு தனி சட்டம் : ... சபரிமலை வரும் பக்தர்களுக்கு வங்கி சேவை சபரிமலை வரும் பக்தர்களுக்கு வங்கி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சிறிய வாகனங்களின் பயணம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சிறிய வாகனங்களின் பயணம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

22 நவ
2019
12:11

சபரிமலை: போலீஸ் கட்டுப்பாட்டுடன் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சிறிய வாகனங்களில் பயணம் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் நிலக்கல் திரும்ப வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.

பெருமழையில் பம்பை உருக்குலைந்த பின்னர் கடந்த சீசனில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் கடந்த சில மாத பூஜைகளில் சிறிய வாகனங்கள் மட்டும் பம்பை வந்து பக்தர்களை இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. மண்டல சீசனில் மீண்டும் அது தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 12 இருக்கைகள் வரை உள்ள வாகனங்கள் பம்பை சென்று பக்தர்களை இறக்கி திரும்பலாம் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் படி நிலக்கல்லில் இருந்து சிறிய வாகனங்கள் பம்பை வர தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் திரும்பி நிலக்கல் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பப்படுகின்றனர். டிரைவர் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது. பக்தர் ஓட்டி வரும் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கார்த்திகை தொடக்கத்தில் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான வாகனங்கள் வந்தது. ஆனால் தற்போது ஐந்தாயிரம் வாகனங்கள் வருகிறது. இதனால் டிராபிக் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர். 2015 –-16-ல் 20 லட்சம், 2016–-17 ல் 26 லட்சம், 2017-–18 ல் 40 லட்சம் வாகனங்கள் வந்ததாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இது 13 லட்சமாக குறைந்ததால், இந்த ஆண்டு அதிக வாகனங்கள் வரும் என்று போலீசார் கணக்கிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar