Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னி அம்மன் கோவிலில் ஏக தின ... வீரராகவர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம் வீரராகவர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்ம பெருமாள் கோவிலில் அன்னகூட்ட மகோற்சவம்
எழுத்தின் அளவு:
நரசிம்ம பெருமாள் கோவிலில் அன்னகூட்ட மகோற்சவம்

பதிவு செய்த நாள்

25 நவ
2019
12:11

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், அன்னகூட்ட மகோற்சவம் நேற்று நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில்.

இங்கு, மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோவிலை 32 முறை வலம் வந்தால், திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்வர்.இந்த கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அன்னகூட்ட மகோற்சவம் நேற்று நடந்தது. மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது. காலை, 8:30 மணி முதல், 10:30 மணி வரை, மூலவர் தரிசனம் கிடையாது. பின், காலை, 10:45 மணிக்கு, காய்கறிகள், இனிப்புகள், பலகாரங்கள், 150 கிலோ சாதம் படைக்கப்பட்டு அன்ன கூட்ட மகோற்சவம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு உற்சவர் பிரகலாதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருக்கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.திருமஞ்சனம்இன்று, சுவாதி திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை, 8:30 மணிக்கு திருமஞ்சனமும், காலை, 9:00 மணிக்கு ஹோமங்களும், காலை, 10:30 மணிக்கு தீர்த்த பிரசாதமும், பகல், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும். மாலை, 5:30 மணிக்கு, உற்சவர் பிரகலாதர் வண்ண மலர்களால் அலங்களிக்கப்பட்டு கோவில் உள்புறப்பாடும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar