பதிவு செய்த நாள்
30
நவ
2019
11:11
பழநி, பழநி முருகன்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, டிச.,4ல் காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது.
மலைக்கோயிலில் டிச.,4ல் மாலை சாயரட்சை பூஜையில் மூலவர், சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, சின்னக்குமாரசுவாமி தங்கசப்பரத்தில் திருவுலா நடக்கிறது. யாகசாலை பூஜை காரணமாக தினமும் இரவு 7:00மணி தங்கரதப்புறப்பாடு இரவு 7:30மணிக்கு நடைபெறும்.டிச.,10ல் பெரியகார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். மாலை சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிகிறார். மலைக்கோயிலின் நான்கு பக்களிலும் தீபங்கள் மற்றும் மேற்கு தீபக்கம்பத்தில் மகாதீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. அன்று இரவு தங்கரதப்புறப்பாடு கிடையாது. இணைஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்கின்றனர்.