தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிடாரி அம்மன் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2019 11:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோவில் தீப திருவிழாவில், பிடாரி அம்மன் உற்சவம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், வரும், 1ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, கோவில் காவல் பரிவார தேவதையான, பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு நேற்று இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, விழா இனிதே நடக்க வேண்டி வழிபாடு நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, பிடாரி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புலி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்