அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே பொதும்பு சங்கையா சுவாமி கோயில் விழா நடந்தது. இதை முன்னிட்டு கோயில் வீட்டில் இருந்து சுவாமியை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அபிஷேக, ஆராதனைகளைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு சாமியாடி மற்றும் பூஜாரிகள் பூக்குழிஇறங்கினர். ராக்காயி, பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.