பதிவு செய்த நாள்
02
டிச
2019
02:12
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, காவேரி நகர் பகுதி சக்தி விநாயகர், புது மாரிய ம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 29ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
அன்றைய தினம், பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை, பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க, யானை, குதிரைகள், ஒட்டகங்களுடன் பங்கேற்க ஊர்வலம் நடந்தது. நேற்று (டிசம்., 1ல்) காலை, 7:30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. யாக சாலையில் வைக் கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட தீர்த்தக்குடத்தில் இருந்த புனித நீர், புது மாரிய ம்மன் கோவில் மற்றும் சக்தி விநாயகர் கோவில் கோபுரங்களின் கலசங்களின் மேல் சிவாச்சாரியர்கள் ஊற்றினர்.
பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்று சரண கோஷமிட்டனர். சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாலாஜி சிவம் குழுவினர் கும்பாபிஷேக விழாவை நடத் தினர். மின்துறை அமைச்சர் தங்கமணி, டி.எஸ்.பி., சண்முகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.