ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் திருக்கோயிலின் ராமர் தீர்த்த குளம் நிரம்பியதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களாக 21 செ.மீ., மழை பெய்ததால் மார்க்கெட் தெரு, நேதாஜி நகர், இந்திரா நகரில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதித்தனர். மேலும் வறண்டு கிடந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ள 22 தீர்த்த கிணறுகள், திருக்கோயில் வெளியில் உள்ள ராமர் தீர்த்த குளம் கனமழையால் 10 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. மேலும் திருக்கோயிலின் லெட்சுமணர் தீர்த்த குளம், திருக்கோயில் வெளிபகுதியில் புனரமைத்த 60 தீர்த்த கிணறுகள், குளங்கள் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி சென்றனர்.