கும்பகோணம், காவிரி ஆற்றின் கரைகளில் வரிசையாக டபீர் படித்துறை, பகவத் படித்துறை, கல்யாணராமன் துறை, பாலு (செட்டி) துறை, சோலையப்பன் துறை என்று உள்ளது. ஒவ்வொரு படித்துறை கரைகளிலும் விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. ஐப்பசி மாதம் காவிரியில் துலா ஸ்நானம் செய்துவிட்டு, இந்த ஐந்து கோயில்களிலும் விளக்கேற்றி வழிபட்டால் காசிக்குப் போன புண்ணியம் கிட்டும்!