”பெண்மணி ஒருவர் பூனை ஒன்றை வளர்த்தாள். அதை பட்டினி போட்டு கொடுமை செய்வாள். நோய்வாய்ப்பட்ட அவளின் வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வந்தது. இப்போது நரகத்தில் அவள் துன்பப்படுகிறாள்.அதே சமயம், பாலைவனத்தில் ஒரு மனிதர் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு கிணற்றின் அருகில் நாய் ஒன்று சோர்ந்து கிடந்தது. தன் ஆடையை ஒரு கயிற்றில் கட்டி கிணற்று நீரில் நனைத்து நாய்க்கு புகட்டினார். இந்த ஒரு நற்செயலால் அவர் இறந்த பின்னர் சொர்க்கத்தில் வாழும் பேறு பெற்றார்” என்றார்.