பதிவு செய்த நாள்
07
டிச
2019
12:12
கோபி: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, டிச.,26ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது, ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீளத்தில், பக்தர்கள் பூமிதிக்க வசதியாக, குண்டம் அமைந்துள்ளது. நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா, ஆகமவிதிப்படி, டிச.,26ல், பூச்சாட்டுதலுடன் கோலாகலமாக துவங்குகிறது. விழாவின் அடுத்த முக்கிய நிகழ்வாக, 2020 ஜன.,6ல், சந்தன காப்பு அலங்காரம், 9ல், திருக்குண்டம், 10ல், திருத்தேரோட்டம், 11ல், மலர்ப்பல்லக்கு, 18ல், மறுபூஜையுடன் நிறைவு பெறுகிறது.