உடுமலை டி.வி., பட்டணம் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் ஆராதன மகோத்சவம் நேற்று நடந்தது. நேற்று காலை, 5:15 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனத்துடன் மகோத்சவம் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு, பல்லக்கு சேவையும், 5:30 மணிக்கு சுவாமி பாதுகா அபிேஷகமானது, அஷ்டோத்தரத்துடன் நடந்தது. தொடர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை, இரவு, 7:30 மணிக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. இதில், உடுமலை சுற்றுப்பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவன பக்தர்கள் செய்திருந்தனர்.