திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் பிரம்மரதத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பிரம்ம ரத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, 12 திருவாராதனம் கண்டருளி, ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. 7:00 மணிக்கு ஜீயர் சுவாமிகள் பிரம்ம ரதத்தில் நான்கு மாடவீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடிச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.