புதுச்சேரி ஒண்டி வீரனார் கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2019 04:12
புதுச்சேரி : ஒண்டி வீரன்ஐயனாரப்பன் கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒண்டி வீரன்ஐயனாரப்பன் கோவிலில் முன் மண்டப வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.விரைவில்மூலாலய திருப்பணி துவக்க உள்ளது.
இதனையொட்டி,பாலாலய கும்பாபிஷேக விழா நேற்று (டிசம்., 8ல்)நடந்தது. பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. , முன்னிலையில் ஒண்டி வீரன், ஐயனாரப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாய கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.