திருப்புல்லாணி:-திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித் தாயார் கோயில் வைணவத் திருத்தலங்களில் 44 வது இடத்தில் உள்ளது. இங்கு அத்யயன உற்ஸவ த்தை முன்னிட்டு டிச.27 முதல் ஜன.5 வரை பகல் பத்து பூஜை முறைகள் நடக்க உள்ளது. ஜன.6ல் திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோல மும், பகல் 1:00 மணிக்கு விஸ்வ ரூப தரிசனக்காட்சிகளும் நடக்கிறது.
மாலையில் சொர்க்க வாசல் திறப்பிற்கான ஆயத்த பூஜைகளும், இரவு 7:15க்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்ஸவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள் பிரகார வீதி உலா நடக்கும்.இரவு 7:35 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப் படும். ஜன.6 முதல் 15 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ் தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.