வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின், அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் சுவாமி புறப்பட்டு வடமதுரை நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் பெருமாள், தலைமை குருசாமி அழகர்சாமி, செயலாளர் சண்முகவேலு செய்தனர்.