Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 9ம் நாள்: வீரத்திருமகளின் ... 11,12ம் நாள்: அசைந்தாடி வருது அங்கயற்கண்ணி தேரு! 11,12ம் நாள்: அசைந்தாடி வருது ...
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
10ம் நாள்: நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்...
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஏப்
2012
05:04

சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் செய்து, உலகையெல்லாம் வென்று, இறைவனின் மனதையும் வென்ற அன்னை  மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது. அனைத்து உலகங்களுக்கும் மணவோலை அனுப்பப்பட்டது. தெய்வத் தம்பதியர்  திருமணம் பூவுலகில் நடப்பதைக் காண  விண்ணுலகமே மண்ணுலகிற்கு வந்தது. மணமகன்  சுந்தரேஸ்வரரை வரவேற்க பிரம்மாவும்,திருமாலும் மதுரைக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். சுமங்கலிப்பெண்கள் பூரண பொற்கலசம் ஏந்தி மங்கல தீபத்தோடு அணிவகுத்து நின்றனர். பெண்ணின் தந்தை மலையத்துவஜ பாண்டிய  மன்னனும், தாய் காஞ்சனமாலையும் மாப்பிள்ளைக்கு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து, எம் மகள் மீனாட்சியை மணந்து பாண்டிய நாட்டை அரசாள  வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அகத்தியர், நாரதர் போன்ற ரிஷிகள் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர். பிரம்மா முன்னிருந்து யாகவேள்வியை நடத்தினார்.  கலைமகளும், அலைமகளும், மலைமகளாகிய மீனாட்சியை அலங்காரம் செய்து மணவறைக்குஅழைத்து வந்தனர். கொட்டியது மேளம்,குவிந்தது கோடி மலர், கட்டினார் மாங்கல்யம். மீன்போன்ற கண்களையுடைய அங்கயற்கண்ணியையும், அழகே வடிவான சுந்தரேஸ்வரரையும் கண்ட அனைவரும், கண் பெற்ற பயனை இன்று கண்டோம் என்று மகிழ்ந்து வாழ்த்தினர். பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்தது. இரவில் கல்யாண கோலத்தில் சுந்தரேஸ்வரர் யானையிலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் மாசி வீதியை வலம் வருவர். இக்காட்சியைத் தரிசித்தால் உங்கள் இல்லத்தில் விரைவில் மேளச்சத்தம் ஒலிக்கும்.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஏழாம்நாளன்று சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர வாகனத்திலும், மீனாட்சி யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar