ராமசேவை செய்வதற்காக ஆஞ்சநேயராகவும், கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காக பீமனாகவும், வியாசருக்கு சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் எடுத்தார் வாயு பகவான். மூவரையும் நினைவூட்டும் வகையில் கர்நாடகா, கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் உள்ள நவபிருந்தாவனத்தில் "அவதாரத்ரய அனுமான் கோயில் உள்ளது. இவரை வழிபட்டால் மனோபலம், புத்தி பலம், உடல்பலம் உண்டாகும்.
இவரது உருண்டு திரண்ட தோள்கள், கதாயுதம் பீமனைக் குறிக்கும். கையிலுள்ள சுவடிகள் மகான் மத்வாச்சாரியாரைக் குறிக்கின்றன. அகோபிலத்தில் ராமதரிசனம் பெற தவம் புரிந்த அனுமனுக்காக வில், அம்பு ஏந்திய நிலையில் ராமரின் அம்சமாக காட்சியளித்தார் நரசிம்மர். இவரே அனுமனுக்கு பின்புறத்தில் வீற்றிருக்கிறார்.