விழுப்புரம்: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, விழுப்புரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங் களில் நேற்று 25ம் தேதி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் 24ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு, அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் தலைமையிலும், அருட்தந்தைகள் ராயப்பன், தியோப்பில் ஆனந்த், அலெக்ஸ் ஆகியோர் முன்னிலையில் குழந்தை இயேசு பிறக்கும் நிகழ்வை சித்தரித்து, மாட்டு தொழுவ குடிலில் குழந்தை இயேசு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர், சிறப்பு திருப்பலி நடந்தது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இதேபோன்று விழுப்புரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.