கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வழிபட்டால், நரம்பு சம்பந்தமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடப்பாண்டு பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
முன்னதாக, நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையும், கணபதி ஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது.