ராமேஸ்வரத்தில் கருப்பாக மாறிய வெள்ளி மயில்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2019 11:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் முருக பெருமான் வீதி உலா வரும் வெள்ளி மயில் வாகனம் கருப்பு நிறமானதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி ஆடித்திருக்கல்யாணம் உள்ளிட்ட பல முக்கிய விழா நாட்களில் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் உலா வரும் போது, பஞ்ச மூர்த்திகள் பல்லக்கில் உலா வருவர்.அஷ்டமி பூ பிரதஷ்ணத்தில் முருகர் வந்த வெள்ளி மயில் வாகனம் கருமை நிறத்தில் இருந்ததைக் கண்ட பக்தர்கள் வேதனை அடைந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக மயில் வாகனத்தை கோயில் நிர்வாகம் பாலீஷ் செய்யாமல், வாகனத்தின் புனிதத்தை பாதுகாக்காமல் கிடப்பில் போட்டனர்.ஓராண்டில் இக்கோயிலில் பலகோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்தும், பக்தர்கள் தரிசிக்கும் வெள்ளி மயில் வாகனத்தை புதுப்பிக்க கோயில் நிர்வாகம் முன்வராதது கண்டனத்திற்குரியது. கருமை நிற மயில்வாகனம் புதுப்பொலிவு பெற இந்து அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் தெரிவித்தனர்.