ரெகுநாதபுரம்: மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பள்ளி வேட்டை நிகழ்ச்சிக்காக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.
பாண்டியன் நகர், குண்டூரணி பாம்புகுழி காளியம்மன் கோயில், கீழவலசை பிள்ளையார் கோயில், மணியக்காரன் வலசை முத்துமாரியம்மன், ரெகுநாதபுரம் கண்ணன் கோயில், மேலவலசை முருகன் கோயில் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தலைமை குருசாமி மோகன்சாமி முன்னிலையில், உற்ஸவர் வல்லபை ஐயப்பன் மலர் அலங்காரத்தில் வில், அம்புகளை ஏந்தியவாறு புலி வாகனத்தில் பள்ளிவேட்டையில், ஐயப்ப சரண கோஷம் முழங்கியவாறு வந்தனர். பக்தர்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் பானகம் பானம் வழங்கப்பட்டது. இரவில் ஐயப்பன் சயனக்கோலத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.