Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மற்றும் திருமோகூர் பெருமாள் ... தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மார்கழி விழா தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலம் கடந்தும் நிற்கும் கல்வெட்டும், கல்தூணும்
எழுத்தின் அளவு:
காலம் கடந்தும் நிற்கும் கல்வெட்டும், கல்தூணும்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:12

வேடசந்தூர்: தமிழகத்தில் மின்சாரம் வராத அக்காலத்தில், குக்கிராமங்களில் கல்தூண்களை நட்டு, அதில் சிறிய விளக்கு வைத்து, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வெளிச்சத்தை உருவாக் கினர் நமது முன்னோர். அவ்வாறே பெரிய தூண்களை உருவாக்கி வெளிச்சம் உருவாக்கிய கிராமங்களே முக்கிய கிராமங்களாக மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வகையில் தாடிக்கொம்பு அகரம் கிராமத்தில் மெயின் ரோட்டில் 30 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன ‘கல் தீபம்’ ஒன்றை அக்காலத்தில் நட்டு வைத்துள்ளனர். மின்சாரம் வந்தபின், வீடுகள்தோறும் மின் விளக்குகள் எரிந்தபின்பே, அக் கல்தூணுக்கு மக்கள்  ஓய்வு கொடுத் துள்ளனர். தற்போதும் விழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சியாக அந்த கல்தூணில் தேங்காய் பழம் வைத்து சூடம் ஏற்றி வணங்கிய பின்பே பணிகள் தொடங்கப்படுவதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும் அந்தத் தூண் அருகே 10 அடி உயரத்தில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்றையும் வைத்துள்ளனர். அந்த கல்வெட்டிலும் பல ஆதாரங்களை கருத்துக்களாக செதுக்கி வைத்துள்ளனர்.

மூன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு வரலாற்று பதிவை மீண்டும் நேரடியாக காணும் வகையில் தாடிக்கொம்பு பகுதியில் கல்தூணும், கல்வெட்டும் விளங்குகிறது.

இதுகுறித்து முத்தாலம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து கூறியதாவது: 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களாய் அக்கல்வெட்டும், தீபத் தூணும் விளங்குகின்றன. இது பாரம்பரியமிக்க வரலாற்று பதிவுகளை தாங்கியுள்ளது. இது குறித்து புத்தங்களும் எழுதப்பட்டுள்ளன, என்றார். இவரை 98657 12875ல் பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar