வேடசந்தூர்: தமிழகத்தில் மின்சாரம் வராத அக்காலத்தில், குக்கிராமங்களில் கல்தூண்களை நட்டு, அதில் சிறிய விளக்கு வைத்து, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வெளிச்சத்தை உருவாக் கினர் நமது முன்னோர். அவ்வாறே பெரிய தூண்களை உருவாக்கி வெளிச்சம் உருவாக்கிய கிராமங்களே முக்கிய கிராமங்களாக மக்களால் பார்க்கப்பட்டன.
இவ்வகையில் தாடிக்கொம்பு அகரம் கிராமத்தில் மெயின் ரோட்டில் 30 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன ‘கல் தீபம்’ ஒன்றை அக்காலத்தில் நட்டு வைத்துள்ளனர். மின்சாரம் வந்தபின், வீடுகள்தோறும் மின் விளக்குகள் எரிந்தபின்பே, அக் கல்தூணுக்கு மக்கள் ஓய்வு கொடுத் துள்ளனர். தற்போதும் விழாக் காலங்களில் முக்கிய நிகழ்ச்சியாக அந்த கல்தூணில் தேங்காய் பழம் வைத்து சூடம் ஏற்றி வணங்கிய பின்பே பணிகள் தொடங்கப்படுவதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும் அந்தத் தூண் அருகே 10 அடி உயரத்தில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்றையும் வைத்துள்ளனர். அந்த கல்வெட்டிலும் பல ஆதாரங்களை கருத்துக்களாக செதுக்கி வைத்துள்ளனர்.
மூன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு வரலாற்று பதிவை மீண்டும் நேரடியாக காணும் வகையில் தாடிக்கொம்பு பகுதியில் கல்தூணும், கல்வெட்டும் விளங்குகிறது.
இதுகுறித்து முத்தாலம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து கூறியதாவது: 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களாய் அக்கல்வெட்டும், தீபத் தூணும் விளங்குகின்றன. இது பாரம்பரியமிக்க வரலாற்று பதிவுகளை தாங்கியுள்ளது. இது குறித்து புத்தங்களும் எழுதப்பட்டுள்ளன, என்றார். இவரை 98657 12875ல் பேசலாம்.