பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள குருவும் சாதகமாக இருந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம் பெருகும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கிய கிரகமான குரு, ராகு சாதகமாக நின்றாலும் சனியும், கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்லை. இந்த நிலையில் தான் இந்த ஆண்டு மலர்கிறது.
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர் வகையில் இணக்கம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குருபலத்தால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். நீண்ட நாளாக தடைபட்ட சுபநிகழ்ச்சி ஜாம் ஜாம் என நடந்தேறும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவியும் தேடி வரும். மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஆக. 31க்கு பிறகு உடல்நிலையில் அதிருப்தி உண்டாகும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஆற்றல் மேம்படும். பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
* வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும். ஆடம்பர வசதிகள் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பணியிடத்தில் திறமை பளிச்சிடும்.
* மருத்துவர்கள் திறமைக்கு உரிய மரியாதை கிடைக்கப் பெறுவர்.
* வக்கீல்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கைவிட்டு போன வழக்குகள் மீண்டும் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் வேலையில் நிம்மதியும் திருப்தியும் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை ஏதும் இல்லை.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றம் காணலாம். உயர்பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புதிய வழியில் வருமானம் வரும்.
* விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு பயிர்கள் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர்.
* பண்ணை தொழில் கால்நடை, பசு வளர்ப்பு போன்றவற்றில் வருவாய் கிட்டும்.
* மாணவர்கள் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு. செலவு கணக்கை சரியாக வைத்துக்
கொள்ளவும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் மத்தியில் குழப்பத்திற்கு ஆளாகலாம். யாரையும் நம்பி பணப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம்.
* தரகு,கமிஷன் தொழில் மனதில் இனம் புரியாத வேதனை குடி கொள்ளலாம். ஆக. 31க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறு குறுக்கிடலாம்.
* அரசு பணியாளர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் வெறுப்பு வரலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. எதிரிகள் தொல்லை, மறைமுகப் போட்டி அதிகம் இருக்கும்.
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை7 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும்.
பரிகாரம்:
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● திங்கட்கிழமை காலையில் சிவாலய வழிபாடு