அன்னுார்:வரதையம்பாளையம் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு, 15வது நாளாக நேற்று டிசம்., 31ல் நடந்தது.வரதையம்பாளையம் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி முதல் நாளிலிருந்து, தினமும், அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 15வது நாளான நேற்று டிசம்., 31ல் அதிகாலை 5:00 மணிக்கு, அபிசேக பூஜையும், 6:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் திருப்பாவையின், 14ம் பாடலை பாடினர்.