பள்ளிப்பருவத்தில் அதிகாலையில் ஐந்து மணிக்கு பிள்ளைகளை எழுப்புவர் பெற்றோர். படிப்பதற்காக! அவர்களோ துாக்கத்தில் மூழ்கிக் கிடப்பர். மாலை நேரத்தில் படிக்கச் சொன்னால் விளையாட ஓடி விடுவர். விளைவு தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்காது. இதே மாணவர்கள், ஒரு வேலையில் சேர்ந்த பின், பெற்றோர் வழிகாட்டுதலை பின்பற்றவில்லையே என வருந்துவர். இவர்கள் பாவ மன்னிப்பு கேட்பதோடு, கிடைத்த வேலை கஷ்டமாக இருந்தால், ஞானத்தை வழங்கும்படி மன்றாட வேண்டும். அதை விட்டு விட்டு, "இப்படி ஒரு நிலையை ஆண்டவர் தந்து விட்டாரே! என வருந்திப் பயனில்லை.