* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும். * கடவுளைப் பூஜிப்பதால் மனம் தூய்மை அடைவதோடு புண்ணியமும் உண்டாகிறது. * எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழி.. * ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும் பொது நியாயத்தைச் செய்வது நல்லது. * சாப்பிடும் போது "கருணையுடன் அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி என சிந்திப்பது நல்லது. * பக்தியோடு உண்பதால் நல்லெண்ணம் வளரும். இந்த பழக்கம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும். * உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். * உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே. * மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். இதை "கர்ம கோட்பாடு என்கிறோம். * அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும். * மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது. * அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், பாவ விஷயங்களில் மனம் ஈடுபடாது. * கல்வியை பணிவுடன் மாணவன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் பயன் உண்டாகாது. * கடவுளின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தியானம் செய்யுங்கள். - சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்