Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு செழிக்க நன்மை தருவார் ... ராமேஸ்வரத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசனம் ராமேஸ்வரத்தில் நடராஜர் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசன விழா
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசன விழா

பதிவு செய்த நாள்

11 ஜன
2020
10:01

திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று கோலாகலமாக நடந்தது.திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்திவிநாயகர் கோயில்களில் திருவாதிரை நட்சத்திரம், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி காலையில் ேஹாம பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவாதிரை களி வழங்கப்பட்டது.பழநி:

இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடந்தது.விழாவின் 10ம் நாளான நேற்று ஆருத்ரா தரிசனத்திற்காக நடராஜர் சன்னதியில் அதிகாலை 4:30 மணிக்கு நடராஜர், சிவகாமியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்காரம் செய்து தீபாதரனை காட்டப்பட்டது. பின் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இணை ஆணையர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் ஏற்பாடுகளை செயதிருந்தனர். வடமதுரை: வடமதுரை திருச்சி ரோட்டிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், பால்,நெய், இளநீர், சந்தனம் என 16 வகை திரவிய பொருட்களை கொண்டு அபிஷேக வழிபாடுகளை அர்ச்சகர்கள் ஐயப்பன், நாராயணன் செய்தனர். ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை சோமவார வழிபாட்டு குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அண்ணாமலையார், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.தாண்டிக்குடி: மலைப் பகுதியில் பாச்சலுார், ஆடலூர், பன்றிமலை, கொடலங்காடு பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் திருவாதிரை நட்சத்திரத்தில் மாங்கல்ய விரதமிருந்தனர். அதிகாலை சுவாமி தரிசனம் செய்து, சுமங்கலிகள் புத்தாடை வைத்து, உணவு படையல் வைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar